தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Selvi Nithianandan

என்னத்தை சொல்ல

ஆதிமனிதன் வாழும்போது
எம்மைகூட மறந்தினம்
ஜாதிமத பேதம்போல
நம்மைக்கூட பார்க்கினம்

ஆடைக்கேற்ற வண்ணமாய்
அங்காடியில் வாங்கினம்
கோடையென மாரியென
கோலாகலம் தேடினம்

பழமை மறந்துதானே
பலபெயரு சொல்லினம்
பணமதிகம் என்பதாலே
பந்தாகாட்டி நிக்கினம்

பகட்டு வாழ்வாலே
புதியதாய் அடுக்கினம்
கோயில் என்றாலே
வெளியும் கழட்டினம்

வரலாற்றில் எம்மை
ஜோடியாக வைக்கினம்
சோடி அறுந்திட்டா
குப்பைக்குள் வீசினமே.

Nada Mohan
Author: Nada Mohan