Selvi Nithianandan

என்னத்தை சொல்ல

ஆதிமனிதன் வாழும்போது
எம்மைகூட மறந்தினம்
ஜாதிமத பேதம்போல
நம்மைக்கூட பார்க்கினம்

ஆடைக்கேற்ற வண்ணமாய்
அங்காடியில் வாங்கினம்
கோடையென மாரியென
கோலாகலம் தேடினம்

பழமை மறந்துதானே
பலபெயரு சொல்லினம்
பணமதிகம் என்பதாலே
பந்தாகாட்டி நிக்கினம்

பகட்டு வாழ்வாலே
புதியதாய் அடுக்கினம்
கோயில் என்றாலே
வெளியும் கழட்டினம்

வரலாற்றில் எம்மை
ஜோடியாக வைக்கினம்
சோடி அறுந்திட்டா
குப்பைக்குள் வீசினமே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading