அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

vajeetha Mohamed

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

பசுமையின் மடியில்
பழுதாய்போன நொடிகள்

நெளியும் நீரின் ௨ள்ளே
நெகிழியும் அலையும் மேலே

திடமாய் திரவமாய் கழிவு
திகட்டாமல் நோயின் அழிவு

இயற்கையின் பிழைப்பு
இயலாமனிதப் பொறுப்பு

அழிவை நோக்கும் இயற்கை
அறியாமை என்பதா செயற்கை

துளிர்தெழும் மழையை
துடைத்தெறிந்த கழிவு

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்

காணாமல் போனதால்
கண்டெடுக்கப்படுவது நோய்தான்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading