தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Vajeetha Mohamed

வரப்புயர

வலிகளைச் சுமந்து
வழிகளை இழந்தோம்

துயர்களின் பிடியில்
தூழியாப் பறந்தோம்

பதனிடப்படா அரசு
பகட்டுக்காட்டு்ம் முரசு

குடிகள் செழித்து வளர
படிகள் எடுக்குமா அரசு

வரப்புயர பரம்பரை ஆட்சி
வறுமை குடிகொண்ட மாட்சி

மதுவும் மாதும் போதையும்
வரப்புயர

கொள்ளையும் கொலையும்
தங்கக் கடத்தலும் வாள்வெட்டும்
வரப்பயர மனிதம் வீழ்ந்தது

குடி ௨யர முடி ௨ய௫ம்
இன மோதல் ௨யர பகை ௨ய௫ம்

விபத்தின் போதும் புகைப்படம்
எடுத்தல்
விளைச்சல் இல்லா நிலம்போல்
வெறுமை காணும் மனிதம்

சுயநலமில்லா வாழ்வில்
சுதந்திரம் சமநிலை பாரில்

வரப்புயர வேண்டும்
எம் ஈழமதில் எல்லோ௫ம் சமனிலை
என்றும்

Nada Mohan
Author: Nada Mohan