பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

அது ஒரு கனாக்காலம்..!!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை-2188!!

„அது ஒரு கனாக்காலம்”

குச்சொழுங்கை குடிசை வீடு
குட்டிக் குட்டிக் கோயில்கள்
திண்ணையிலே பாட்டி அப்பு
தீராத மண் விளையாட்டு..

ஊர் கூடிப் பொங்கல்கள்
ஊர்க் கோயில் திருவிழா
பள்ளிக் கூட பம்பல்கள்
பாட இடைவேளை வீடு வருதல்..

ஆடு மாடு கோழி நாய் பூனை
அத்தனையும் வளவுக்குள்
வேலியிலே பொட்டு வைத்து
வெடுக்கென்று புகுந்தோட்டம்..

அடுத்த வீடு சமையல் -அதில்
நமக்கும் ஒரு கை பிடியல்
வீதியிலே மிதி வண்டி-அதை
துரத்தி ஓடும் தெரு நாய்கள்..

கோயில் மணியே அலாரம்
காகங் கரைதல் தந்தி ஆகும்
பாட்டி சொல்லும் ஊர்க்கதை
பணியார வாசம் நாசி நுழை..

அது ஒரு கனாக்காலம்
இங்கில்லை அந்த கோலம்

Nada Mohan
Author: Nada Mohan