” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அது ஒரு கனாக்காலம்..!!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை-2188!!

„அது ஒரு கனாக்காலம்”

குச்சொழுங்கை குடிசை வீடு
குட்டிக் குட்டிக் கோயில்கள்
திண்ணையிலே பாட்டி அப்பு
தீராத மண் விளையாட்டு..

ஊர் கூடிப் பொங்கல்கள்
ஊர்க் கோயில் திருவிழா
பள்ளிக் கூட பம்பல்கள்
பாட இடைவேளை வீடு வருதல்..

ஆடு மாடு கோழி நாய் பூனை
அத்தனையும் வளவுக்குள்
வேலியிலே பொட்டு வைத்து
வெடுக்கென்று புகுந்தோட்டம்..

அடுத்த வீடு சமையல் -அதில்
நமக்கும் ஒரு கை பிடியல்
வீதியிலே மிதி வண்டி-அதை
துரத்தி ஓடும் தெரு நாய்கள்..

கோயில் மணியே அலாரம்
காகங் கரைதல் தந்தி ஆகும்
பாட்டி சொல்லும் ஊர்க்கதை
பணியார வாசம் நாசி நுழை..

அது ஒரு கனாக்காலம்
இங்கில்லை அந்த கோலம்

Nada Mohan
Author: Nada Mohan