12
Aug
13.08.2026 கேவலார் புனித பயணம்-2047 ஜெயா நடேசன்
கோடை விடுமுறை அழகாக மலர்ந்தது
பாமுக விடுப்பு...
06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
பேரின்பம் ஒன்றென்றால் பெற்றவளின் தாலாட்டே
பாரினிலே உண்டோசொல் பாசத்தின் உறவொன்று
ஈரநெஞ்சங் கொண்ட இறைவனும் அவளே
ஆரமுதே என்றேதான் அணைத்திடுவாளே
அவனியிலே நிகருண்டோ?
தன்னையும் விஞ்சியே தன்னுயிர் தந்தாளே
தன்னலம் இன்றியே தன்னை உருக்கியே
என்னாளும் சேய்களை எண்ணுவாள் பூமியிலே
கண்கண்ட தெய்வம் கருணைகாட்டும் தாயவளே
அவனியிலே நிருண்டோ?
உலகினைக் காண உடலது ஈந்தாளே
பலவகைப் பாடுகள் பட்டிடுவாள் அன்னையன்றோ
பேரன்பின் பெருவெளி பேறு பெற்றோமே
தாரக மந்திரம் தாரணியில் தாயவளே!
அவனியிலே நிகருண்டோ?
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு வாழ்த்துகள்!
திரு.திருமதி. நடா மோகன் அவர்கட்கு மிகுந்த நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுக் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...