பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

அன்னை தெரேசா

நேவிஸ் பிலிப் கவிஇல(144) 29/08/24

விதைகள் பதர்களனால்
விளைச்சல் இருப்பதில்லை
தடாகத்தில் வேர்கள்
ஆழப் பதியாவிடில்
தாமரை மலர்வதில்லை

அன்பின் அடித்தளத்தை
ஆழத் தோண்டி
ஆன்மீக ஆறுகளை
அணைகட்டி வைத்து

ஒற்றுமை ஓடையிலே
நீந்துகின்ற மீன்களென
வாழ்ந்த பெற்றோரின்
வளர்ப்பில் வளர்ந்தவர்

அவர்களின் வாழ்வே
மகளின் வாழ்வுக்கு
விளக்குத் தூணாக

மனமெனும் நிலத்தில்
கொத்துக்கொத்தாய்
கதிர்கள் வளர்ந்து
நற்செயல்கள் நிறைவேற
வழி வகுத்தது

அறிவுரை அலைகள்
நிறுத்திச் சென்ற
சிறுதுளிகளால்
நிமிர்ந்தார் அன்னை தெரேசா

தன்னலமறியா தாயுள்ளம்
பிறருக்காய் வாழ்ந்த
கருணை உள்ளம்
காலத்தின் கணக்கினிலே
உயர்ந்து நிற்கும் உன்னதம்
அன்னை தெரேசா.

Nada Mohan
Author: Nada Mohan