” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அன்னை தெரேசா

நேவிஸ் பிலிப் கவிஇல(144) 29/08/24

விதைகள் பதர்களனால்
விளைச்சல் இருப்பதில்லை
தடாகத்தில் வேர்கள்
ஆழப் பதியாவிடில்
தாமரை மலர்வதில்லை

அன்பின் அடித்தளத்தை
ஆழத் தோண்டி
ஆன்மீக ஆறுகளை
அணைகட்டி வைத்து

ஒற்றுமை ஓடையிலே
நீந்துகின்ற மீன்களென
வாழ்ந்த பெற்றோரின்
வளர்ப்பில் வளர்ந்தவர்

அவர்களின் வாழ்வே
மகளின் வாழ்வுக்கு
விளக்குத் தூணாக

மனமெனும் நிலத்தில்
கொத்துக்கொத்தாய்
கதிர்கள் வளர்ந்து
நற்செயல்கள் நிறைவேற
வழி வகுத்தது

அறிவுரை அலைகள்
நிறுத்திச் சென்ற
சிறுதுளிகளால்
நிமிர்ந்தார் அன்னை தெரேசா

தன்னலமறியா தாயுள்ளம்
பிறருக்காய் வாழ்ந்த
கருணை உள்ளம்
காலத்தின் கணக்கினிலே
உயர்ந்து நிற்கும் உன்னதம்
அன்னை தெரேசா.

Nada Mohan
Author: Nada Mohan