பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

« அன்றும் இன்றும் »

நேவிஸ் பிலிப் கவி இல(486)

மாதா பிதா குரு தெய்வமென்று
போற்றி மகிழ்ந்தோம் அன்று
மதிப்பின்றி மனம் போன போக்கிலே
இளைய தலை முறை இன்று

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நாடு நடந்தது அன்று
நல்லறிவுரை தன்னை தட்டிக் கழித்து
கண்டபடி பேசுகின்றார் இன்று

இரவு மணி பத்தானால் தூக்கம்
கண்ணைத் தழுவும் அன்று
இரவினில் ஆட்டம் போட்டு
பகலினில் தூங்குகின்றார் இன்று

அண்ணன் தம்பி உறவாக
ஓடியாடி விளையாடியது அன்று
தனியாளாய் ஓரறையில்
அலை பேசி விளையாட்டு இன்று

ஊதியக் குறைவிலும் நிறைவாய்
மகிழ்ந்து வாழ்ந்தோம் அன்று
மிகுந்த பணம் கண்டாலும்
நிம்மதி இன்றி அலைவோர் பலர் இன்று
நன்றி,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan