” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

« அன்றும் இன்றும் »

நேவிஸ் பிலிப் கவி இல(486)

மாதா பிதா குரு தெய்வமென்று
போற்றி மகிழ்ந்தோம் அன்று
மதிப்பின்றி மனம் போன போக்கிலே
இளைய தலை முறை இன்று

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நாடு நடந்தது அன்று
நல்லறிவுரை தன்னை தட்டிக் கழித்து
கண்டபடி பேசுகின்றார் இன்று

இரவு மணி பத்தானால் தூக்கம்
கண்ணைத் தழுவும் அன்று
இரவினில் ஆட்டம் போட்டு
பகலினில் தூங்குகின்றார் இன்று

அண்ணன் தம்பி உறவாக
ஓடியாடி விளையாடியது அன்று
தனியாளாய் ஓரறையில்
அலை பேசி விளையாட்டு இன்று

ஊதியக் குறைவிலும் நிறைவாய்
மகிழ்ந்து வாழ்ந்தோம் அன்று
மிகுந்த பணம் கண்டாலும்
நிம்மதி இன்றி அலைவோர் பலர் இன்று
நன்றி,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan