« அன்றும் இன்றும் »

நேவிஸ் பிலிப் கவி இல(486)

மாதா பிதா குரு தெய்வமென்று
போற்றி மகிழ்ந்தோம் அன்று
மதிப்பின்றி மனம் போன போக்கிலே
இளைய தலை முறை இன்று

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நாடு நடந்தது அன்று
நல்லறிவுரை தன்னை தட்டிக் கழித்து
கண்டபடி பேசுகின்றார் இன்று

இரவு மணி பத்தானால் தூக்கம்
கண்ணைத் தழுவும் அன்று
இரவினில் ஆட்டம் போட்டு
பகலினில் தூங்குகின்றார் இன்று

அண்ணன் தம்பி உறவாக
ஓடியாடி விளையாடியது அன்று
தனியாளாய் ஓரறையில்
அலை பேசி விளையாட்டு இன்று

ஊதியக் குறைவிலும் நிறைவாய்
மகிழ்ந்து வாழ்ந்தோம் அன்று
மிகுந்த பணம் கண்டாலும்
நிம்மதி இன்றி அலைவோர் பலர் இன்று
நன்றி,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading