நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

« அன்றும் இன்றும் »

நேவிஸ் பிலிப் கவி இல(486)

மாதா பிதா குரு தெய்வமென்று
போற்றி மகிழ்ந்தோம் அன்று
மதிப்பின்றி மனம் போன போக்கிலே
இளைய தலை முறை இன்று

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நாடு நடந்தது அன்று
நல்லறிவுரை தன்னை தட்டிக் கழித்து
கண்டபடி பேசுகின்றார் இன்று

இரவு மணி பத்தானால் தூக்கம்
கண்ணைத் தழுவும் அன்று
இரவினில் ஆட்டம் போட்டு
பகலினில் தூங்குகின்றார் இன்று

அண்ணன் தம்பி உறவாக
ஓடியாடி விளையாடியது அன்று
தனியாளாய் ஓரறையில்
அலை பேசி விளையாட்டு இன்று

ஊதியக் குறைவிலும் நிறைவாய்
மகிழ்ந்து வாழ்ந்தோம் அன்று
மிகுந்த பணம் கண்டாலும்
நிம்மதி இன்றி அலைவோர் பலர் இன்று
நன்றி,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan