10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
அபிராமி கவிதாசன்
06.06.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -225/
தலைப்பு !
“ஆறுமோ ஆவல் “
அன்னைப் பூமி
மடிதனிலே – என்னை
அள்ளி அணைத்த
தாய் மண்ணே !
தத்தித் தவழ்ந்து
நடைபழகி – விழுந்து
முத்தம் பதித்த
முதல் மண்ணே!
உன்னைத் தொட்டு
சுவைத்த பின்புதானே
சுவையை அறிந்தேன்-என்
சொந்த மண்ணே !
வெள்ளைச் சீருடையில்
வெண்புறா நானும்
விழுந்து எழுந்ததும் -உன்
மடி மண்ணே !
நட்பின் குழாமுடன்
நான் கூடிக்குழாவி
கொஞ்சி மகிழ்ந்த
நன்செய் மண்ணே !
தோட்டப் பயிரும்
தொண்மைத் தமிழும்
நாட்டமுடனே நானும்-உன்னால்
அறிந்த மண்ணே!
இதயம் ஓரமாய்
இன்னும்பல நினைவுகள்
இப்படியாக – என்னை
எட்டிப் பார்க்கிறதே
ஏக்கமுடன் என்தாய்மண்ணே !
உன்னை விட்டுப்பிரிந்தேன்
விடிவே இல்லை !
ஆவலும் கொண்டேன்
ஆறுமோ மனமும்-என்
சொந்த மண்ணே!
திறனாய்வு மிக சிறப்பு
நன்றி பாவை அண்ணா🙏🏻

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...