தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அபிராமி கவிதாசன்

06.06.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -225/
தலைப்பு !
“ஆறுமோ ஆவல் “

அன்னைப் பூமி
மடிதனிலே – என்னை
அள்ளி அணைத்த
தாய் மண்ணே !

தத்தித் தவழ்ந்து
நடைபழகி – விழுந்து
முத்தம் பதித்த
முதல் மண்ணே!

உன்னைத் தொட்டு
சுவைத்த பின்புதானே
சுவையை அறிந்தேன்-என்
சொந்த மண்ணே !

வெள்ளைச் சீருடையில்
வெண்புறா நானும்
விழுந்து எழுந்ததும் -உன்
மடி மண்ணே !

நட்பின் குழாமுடன்
நான் கூடிக்குழாவி
கொஞ்சி மகிழ்ந்த
நன்செய் மண்ணே !

தோட்டப் பயிரும்
தொண்மைத் தமிழும்
நாட்டமுடனே நானும்-உன்னால்
அறிந்த மண்ணே!

இதயம் ஓரமாய்
இன்னும்பல நினைவுகள்
இப்படியாக – என்னை
எட்டிப் பார்க்கிறதே
ஏக்கமுடன் என்தாய்மண்ணே !

உன்னை விட்டுப்பிரிந்தேன்
விடிவே இல்லை !
ஆவலும் கொண்டேன்
ஆறுமோ மனமும்-என்
சொந்த மண்ணே!

திறனாய்வு மிக சிறப்பு
நன்றி பாவை அண்ணா🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading