21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
அபிராமி கவிதாசன்
06.06.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -225/
தலைப்பு !
“ஆறுமோ ஆவல் “
அன்னைப் பூமி
மடிதனிலே – என்னை
அள்ளி அணைத்த
தாய் மண்ணே !
தத்தித் தவழ்ந்து
நடைபழகி – விழுந்து
முத்தம் பதித்த
முதல் மண்ணே!
உன்னைத் தொட்டு
சுவைத்த பின்புதானே
சுவையை அறிந்தேன்-என்
சொந்த மண்ணே !
வெள்ளைச் சீருடையில்
வெண்புறா நானும்
விழுந்து எழுந்ததும் -உன்
மடி மண்ணே !
நட்பின் குழாமுடன்
நான் கூடிக்குழாவி
கொஞ்சி மகிழ்ந்த
நன்செய் மண்ணே !
தோட்டப் பயிரும்
தொண்மைத் தமிழும்
நாட்டமுடனே நானும்-உன்னால்
அறிந்த மண்ணே!
இதயம் ஓரமாய்
இன்னும்பல நினைவுகள்
இப்படியாக – என்னை
எட்டிப் பார்க்கிறதே
ஏக்கமுடன் என்தாய்மண்ணே !
உன்னை விட்டுப்பிரிந்தேன்
விடிவே இல்லை !
ஆவலும் கொண்டேன்
ஆறுமோ மனமும்-என்
சொந்த மண்ணே!
திறனாய்வு மிக சிறப்பு
நன்றி பாவை அண்ணா🙏🏻
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...