“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

08.03.2022
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…
“திமிர்”

திமிர் உன்னுள் சிக்குண்டால்
திமிருதல் கடினமே
உமிழும் சொற்களும்
உதவாது சிதறுமே /

ஆணவம் நம்மை
ஆட்க்கொள்ளும் தருணம்
வேதனை வார்த்தை
வில்லம்பாய் பாயுமே /

சோதனைக் காலமாய்
சொல்லதனை ஏற்றுமே
சாதனை படைக்குமே
சாதூரிய பொறுமையே /

நடையும் உடையும்
நடத்தையின் முறைமையும்
ஆணவக் குணத்தினை
அடிக்கோடிட்டு காட்டுமே /

கர்வம் வைத்தே
காத்திருக்கும் இருதயமே
சர்வ அதிகாரமும்
சாமத்தியம் என்றெண்ணாதே /

அகங்களும் அழகல்ல
அன்பியம் அழகாகும்
சுகமான இதயங்களே
சுதாரிப்பீர் சூழ்நிலையை /

நன்றி பாவைஅண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan