20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
அபிராமி கவிதாசன்.
08.03.2022
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…
“திமிர்”
திமிர் உன்னுள் சிக்குண்டால்
திமிருதல் கடினமே
உமிழும் சொற்களும்
உதவாது சிதறுமே /
ஆணவம் நம்மை
ஆட்க்கொள்ளும் தருணம்
வேதனை வார்த்தை
வில்லம்பாய் பாயுமே /
சோதனைக் காலமாய்
சொல்லதனை ஏற்றுமே
சாதனை படைக்குமே
சாதூரிய பொறுமையே /
நடையும் உடையும்
நடத்தையின் முறைமையும்
ஆணவக் குணத்தினை
அடிக்கோடிட்டு காட்டுமே /
கர்வம் வைத்தே
காத்திருக்கும் இருதயமே
சர்வ அதிகாரமும்
சாமத்தியம் என்றெண்ணாதே /
அகங்களும் அழகல்ல
அன்பியம் அழகாகும்
சுகமான இதயங்களே
சுதாரிப்பீர் சூழ்நிலையை /
நன்றி பாவைஅண்ணா🙏

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...