அபிராமி கவிதாசன்.

08.03.2022
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…
“திமிர்”

திமிர் உன்னுள் சிக்குண்டால்
திமிருதல் கடினமே
உமிழும் சொற்களும்
உதவாது சிதறுமே /

ஆணவம் நம்மை
ஆட்க்கொள்ளும் தருணம்
வேதனை வார்த்தை
வில்லம்பாய் பாயுமே /

சோதனைக் காலமாய்
சொல்லதனை ஏற்றுமே
சாதனை படைக்குமே
சாதூரிய பொறுமையே /

நடையும் உடையும்
நடத்தையின் முறைமையும்
ஆணவக் குணத்தினை
அடிக்கோடிட்டு காட்டுமே /

கர்வம் வைத்தே
காத்திருக்கும் இருதயமே
சர்வ அதிகாரமும்
சாமத்தியம் என்றெண்ணாதே /

அகங்களும் அழகல்ல
அன்பியம் அழகாகும்
சுகமான இதயங்களே
சுதாரிப்பீர் சூழ்நிலையை /

நன்றி பாவைஅண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading