மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -174. 16.06.2022

தலைப்பு !
“அணையா அகல்விளக்கே”

ஆளுமை ஒளிச்சுடரே
ஆராதனை செய்கின்றேன்
நாளும் பொழுதெல்லாம்
நற்சிந்தனை விதைத்தீரே

அணையா அகல்விளக்கே
அணைந்திட துடித்திட்டேன்
இணைகர பெண்ணியமே
இதயம் பொறுக்கலையே

துணிவாய் வாழ்ந்திட
துணையாய் இருந்தீரேஅம்மா
தணியா கவித்தாகம்
தனிந்து அணைந்தனவோ

பௌர்னமி முழுநிலவே
புன்னகை மதிமுகமே
மௌனமாய் கண்ணுறங்கி
மரணித்துப் போனீரோ

கவித்துவக் காவியமே
கனத்திட மறந்தீரோ அணையா அகல்விளக்கே

ஆளுமை ஒளிச்சுடரே
ஆராதனை செய்கின்றேன்
நாளும் பொழுதெல்லாம்
நற்சிந்தனை விதைத்தீரே

அணையா அகல்விளக்கே
அணைந்திட துடித்திட்டேன்
இணைகர பெண்ணியமே
இதயம் பொறுக்கலையே

துணிவாய் வாழ்ந்திட
துணையாய் இருந்தீரேஅம்மா
தணியா கவித்தாகம்
தனிந்து அணைந்தனவோ

பௌர்னமி முழுநிலவே
புன்னகை மதிமுகமே
மௌனமாய் கண்ணுறங்கி
மரணித்துப் போனீரோ

கவித்துவக் காவியமே
கனத்திட மறந்தீரோ
புவியினில் கவிவாச
புகழ்பாடி பிரார்த்திப்போம்🙏😌😌😌
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !

அம்மா! அழகுத் தேவதையயே!
ஆற்றல் மிகு ஆசானே
நிலவாய் சிரிக்கும் முகத்தை எப்போ காண்போம்.
பெண்ணியத்தின் பெருநிதி. தன்னலமற்ற தாயே! தமிழ்ச்சுடரே! உங்களின் இறுதிஆசு கவிஎன்றா என்னையும் அழைத்தீர்கள் 😌

அம்மா உங்கள் பெருமையைக்கண்டு வியக்கின்றேன் . ஆழ்ந்தவேதனையுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
புவியினில் கவிவாச
புகழ்பாடி பிரார்த்திப்போம்🙏😌
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !

அம்மா! அழகுத் தேவதையயே!
ஆற்றல் மிகு ஆசானே
நிலவாய் சிரிக்கும் முகத்தை எப்போ காண்போம்.
பெண்ணியத்தின் பெருநிதி. தன்னலமற்ற தாயே! தமிழ்ச்சுடரே! உங்களின் இறுதிக்கவியரங்கு என்றா? என்னையும் அழைத்தீர்கள்.
அம்மா உங்கள் பெருமையைக்கண்டு வியக்கின்றேன் . ஆழ்ந்தவேதனையுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

கலைவாணி மோகன் அவர்கள்
கவித்திறனாய்வு சகோதரிக்கும் என் மனமார்ந்த
நனிமிகு நன்றி நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan