கனவே கலையாதே

கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

என் கனவே கலையாதே நீயும்

உன் பணியில் நான் வாழ்வேன்

நல்வழியினிலே நானும் நடைபயில வேண்டுமடி

உணர்வை மாற்றாதே உலகத்தை அறியவிடு

வாட்டும் துன்பமெல்லாம் ஒதுங்கியே ஓடவிடு

வாழ்வது சிலகாலம் வண்ணமாய் மலரவிடு

தாழ்வுகள் இல்லாத தரத்தினைத் தந்துவிடு

காலம் காட்டிடாது கடமையை மறந்திடாது

நேரத்தைக் குறிப்பறிந்து நிமிர்ந்திட வே நன்றாய்

சிறகில் எனைமூடிச் சித்திரமாய் எனைக்காத்து

உறவால் கூடிடுவாய் உரிமையில் மகிழ்ந்திடவே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading