செவிலியர் திலகம்…

ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்.......13.08.2026 செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து துன்பக்கடலில்...

Continue reading

“தாதியர் தினம்”

நேவிஸ் பிலிப் கவி இல(641)

வெண்ணிற மல்லிகை ஒன்று
பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு
பிறர் அன்பில் ஆர்வம் தூண்ட
எழுத்தாள் விளக்கேற்றி
விழுப் புண்கள் ஆற்றிய சீமாட்டி

புளோறன்ஸ் தாய் வழி வந்த சேவகிகள்
உயுரோடு உறவாடும் தாதியர்கள்
இரவிலும் மூட மறுக்கும் விழிகளோடு
அயராது சேவையாற்றும் தேவதைகள்

தியாகத்தின் இருப்பிடம்
இவர்கள் கரங்களும் ஔடதம்
பேச்சில் துளிர்க்கும் நம்பிக்கை
உயிர் மூச்சைப் பிடிக்கும்அன்பின் கை

இவர்கள் பணிகள் நாளும் சிறக்க
பிணிகள் தூரப் பறக்கும்
அன்புச் சேவையில் பூக்கும் தாதியரை
நெஞ்சம் நிறை நன்றியோடு போற்றிடுவோம்
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading