முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -253

தலைப்பு!
பிள்ளைக் கனி அமுது
…..

பிள்ளைக் கனியமுது – அதைப்
பெறுதல் தனியினிது
வெள்ளை மனத்தழகு – அதில்
விளையும் உருபுதிது!

பிஞ்சுக் கைஅசைவு – அட
பச்சைக் கிளிச்சிறகு
அஞ்சாப் புதுவரவு – பிள்ளை
அடங்காப் பெருந்துணிவு!

தவழுவும் கலைநிலவு – பிள்ளை
தமிழ்போல் தேன்பிழிவு
கவரும் விழிப்பதிவு – பிள்ளை
கரும்பாய்ச் சுவைச்செறிவு!

அரும்பின் இதழ்பொலிவு – பிள்ளை
அறிவில் வளர்தெளிவு
சுரும்பாய் அதுசுழலும் – அதைச்
சுற்றி வரமகிழும்!

பிள்ளைக் கனியமுது – அதை
வெல்வ தினிஅரிது!
துள்ளும் மொழிமழலை – அது
தொலைக்கும் நம்கவலை!

அபிராமி கவிதாசன்
13.02.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading