போர் என்னும் அவலம் 754 19.03.2026

செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்

வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே பலரது நிலமை

வர்த்தகம் என்பது வியாபாரம்
வஞ்சித்து அடிப்பது அநியாயம்
வயிற்றுப் பசிக்கு வழியேது
வசதியற்றவர் புசிக்க நிலையேது

ஆயுத விற்பனை ஒருபுறம்
ஆதரவு சேர்க்கும் மறுபுறம்
ஆட்சி ஆலோசனை பயனேது
ஆதிக்கம் காட்டுவதால் அழிவுதானே

நிம்மதி இல்லா பலரது வாழ்வு
நிழல் போல் தொடரும் யுத்தம்
நித்தம் பலரது அழுகை சத்தம்
நீட்சியா நீங்குமா புரியாத விடியல்

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading