மூத்தோர் 104

ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025

நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர யாருளர்
எமக்கும் தந்து எம்மை உயர்த்துவீரே

பழுத்த இலையாய் பாரினில் வீழ்ந்து
விழுந்த இடமே விதையாய் எழுந்து
உலகின் பெருமை உணர்த்தும் ஒளியே
மலரின் அழகாய் மலர்ந்து வரவே

காலத் தழும்புகள் காட்டும் கதையோ
ஞாலம் தரும் நல் முகவரியோ
முகமலர்வு கொண்டு பேணிக்காக்க
நகல் போல் நம்பிள்ளை தொடருமே

முதியோர் கதை மௌனமாய் உறங்க
மதிப்போர் வாழ்வு மலர்ந்து விளங்க
மூத்தோர் போற்றி வணங்கி வர
புத்தகங்கள் தேவையில்லை எமக்கே

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading