” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மூத்தோர் 104

ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025

நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர யாருளர்
எமக்கும் தந்து எம்மை உயர்த்துவீரே

பழுத்த இலையாய் பாரினில் வீழ்ந்து
விழுந்த இடமே விதையாய் எழுந்து
உலகின் பெருமை உணர்த்தும் ஒளியே
மலரின் அழகாய் மலர்ந்து வரவே

காலத் தழும்புகள் காட்டும் கதையோ
ஞாலம் தரும் நல் முகவரியோ
முகமலர்வு கொண்டு பேணிக்காக்க
நகல் போல் நம்பிள்ளை தொடருமே

முதியோர் கதை மௌனமாய் உறங்க
மதிப்போர் வாழ்வு மலர்ந்து விளங்க
மூத்தோர் போற்றி வணங்கி வர
புத்தகங்கள் தேவையில்லை எமக்கே

Jeba Sri
Author: Jeba Sri