ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..

வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி உலகில் புதுப்புது நுட்பம்
வித்தக வேட்கையும் விரும்பிய துறையும்
முத்தமிழ் மகுடமே முழு உலகிடை சரிதம்
எத்தனை எத்தனை நாட்டவர் கற்கிறார்
செழுமையைச் செப்புவார்
அறிஞர்கள் பலராய் ஆய்வு செய்கிறார்
அருந்தமிழ் மொழியே முதன்மை என்கிறார்
அகிலப்பரிதியை ஆண்ட தமிழ்
அன்னைமொழியாய் ஆதித்தமிழ்

ஆழி கடந்தும் ஆளும் செந்தமிழ்
மூத்தமொழியே முதன்மைத்தமிழே
கலங்கரை விளக்கே காவியச் சிந்தே
ஞாலக்குன்றில். நற்றமிழ் வேராய்
நோக்கும் திசையெங்கும் மகுடத்தின் மாண்பே!
ஈர்க்கும் எம்தமிழ் இதயத்தின் கரும்பே! மிக்கநன்றி

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading