அன்னை

செல்வி நித்தியானந்தன்
அன்னை

தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்

அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்

எட்டுமகவுகள் பெற்று
எண்ணில்லா மகிழ்ச்சி
குடும்பத்தில் கடைசி
என்றுமே புகழ்ச்சி

பங்குனி முப்பது
அன்னையின் இழப்பு
ஆறுஆண்டு கடந்ததே
ஆறமுடியா துயரமே

செல்வி நித்தியானந்தன்

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading