மூத்தோர்…

வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்…
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும் முதுமை
தாங்கிடும் நிலைகுன்றி தள்ளாடும் வறுமை

ஏங்கிடும் விழிக்குள் எத்தனை கனவு
ஒய்வற்ற கடிகாரம் போல் சுழன்றது நினைவு
அன்பாய் பாசமாய் அரவணைத்த ஆற்றல்
அகிலத்தின் வேர்களாய் அர்ப்பணித்த நாட்கள்

முகவரி பதித்தவர் முழுவித்தகம் நிறைத்தவர்
தளர்விலே இன்று தள்ளாடி வீழ்கிறார்
அறுவடை நாற்றுகள் ஆயிரம் ஏரிகள்
சேவையின் செம்மல்கள் செவ்வழி ஆசான்கள்

வித்தகம் நிறைத்தவர் வியூகங்கள் படைத்தவர்
வாழ்விலே எழுதிய வண்ணங்கள் ஒளிருது

இயலாமை வாட்டுது இடர்களே தொடருது
உடுக்கைஇழந்தவன் கைபோலே
இடுக்கண்களைவதே -மனிதத்தின்வேலி

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading