வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-266.

தலைப்பு! “நிர்மூலம்”
……
முள்ளிவாய்க்
காலில்
எம்மக்களும்,
மாவீரர்களும்
சிங்கள
இனவெறிக் காடையரின்
பயங்கரவாத
அரசால்
நிர்மூலம்
ஆக்கப்பட்டதை
எப்படி
எங்களால்
மறக்க முடியும்?

நிர்மூலமாக்கப்பட்ட
எம் தேசத்தை மீட்கவே
உணர்வூட்டுவோம்
நினைந்து நினைந்து
விடுதலை வேட்கை
வெறியேற்றுவோம்!

எமது தாகம்
தமிழீழத் தாயகம் –
என்பதை
என்றும் மறப்போமா?
வென்று முடிக்காமல்
வெற்றி படைக்காமல்
நாங்கள் வீணாய்
இறப்போமா?

போதையற்ற தேசம்
படைத்தோம் – அதை
நிர்மூலமாக்கிய சிங்களம் கண்டோம்
பாலியல் குற்றம்
பரவக் கண்டோம் – அதைத்
தடுக்க முடியா
அரசுகள் கண்டோம்!

நள்ளிரவிலும்
வஞ்சியர் நடப்பார்
நான்கு திசையிலும்
காவல் இருப்பார் – அதில்
நேற்றுக் கிளியாய்
இருந்த தங்கைகள் – இன்று
விடுதலைப் புலியாய்
இருப்பார் – பகைவன்
தொட்டால்
நெருப்பாய் எரிப்பார்!

தற்சார்பு நிலையில்
இருந்த தாயகம் – அதில்
தன்னிகரற்ற – தேசியத்
தலைவரே நாயகம்!
கொடிய சிங்களர்
வாழும் கொழும்பு – அதில்
நாங்கள் அடித்ததே
மாறாத் தழும்பு!

எம்மை நிர்மூலம்
ஆக்கிய எதிரியை
நினைப்போம் – நாம்
நினைத்ததை முடிக்க
சீமான் சின்னமாய்
இருப்போம்!
.
இன்று அழியும்
விளிம்பில்
தமிழினம் பாரீர் – அதைத்
தடுத்து நிறுத்த
ஒற்றுமை தாரீர்!
நம்மை நிர்மூலமாக்கிய
சக்தியைப் பிளப்போம்
நமக்குப் போட்டத் தடையை
உடைப்போம்!

புலம்பெயர்ந்தவர்
புயலாய் எழுவோம் – அறிவுப்
புரட்சியால் ஈழம்
படைக்கத் திரள்வோம்
நம்மை
நிர்மூலமாக்கியப்
படு கொலையரைப்
பிடிப்போம் – அவரை
நிர்மூலமாக்கும்
செயலில் துடிப்போம்!

அடிக்கு அடியைக்
கொடுக்க மறப்போமா?
பல ஆண்டுகள் ஆயினும்
சும்மா இருப்போமா?

அபிராமி கவிதாசன்.
21.05.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading