” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன்

அதிகரிக்கும் வெப்பம்

கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும் வாழ்விற்கு கதிரவன் ஒளி

காலை வந்தால் கணகணக்கும் வெயில்
மாலைமுழுவதும் மணிக்கணக்காய் பகல்
சோலையோர குயிலும் சுகந்தம் பாடும்
சொந்தம் யாவும் குதூகலித்து மகிழும்

கோடை வெப்பம் அதிகரித்து கூடுது
கொள்ளை நோய்களும் மிகுத்து பரவுது
தும்மல் பலருக்கு நோயாக மாறுது
துரத்தும் கிருமியும் வளர்ச்சியாயக்; கூடுது.

நகுலா சிவநாதன் 1813

Nada Mohan
Author: Nada Mohan