வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்…267
தலைப்பு! “வேள்வி”

எங்கள் விடுதலை
எங்கே என்பது
எங்கள் கேள்வி! – இன
மொழி உணர்வை நெய்யாய் ஊற்றி
வளர்ப்போம் வேள்வி!

செந்நெல் மணிகளும்
கன்னல் வயல்களும்
சிங்களன் கையிலே – எங்கள்
தேசம் முழுவதும்
நாச மானது
கொடியவன் தீயிலே!

அடக்கு முறைகளும்
ஒடுக்கு முறைகளும்
சொன்னால் கொஞ்சமா ?- சிங்கள
அரசின் இனவெறி
எங்களின் உயிர்ப்பலி
பற்பல இலட்சமே!

புத்தனின் போர்வையில்
இரத்தம் குடித்தவன்
துறவறப் பிக்குவா? – நல்
சமத்துவம் அற்றவன்
ஆள்வதா இன்று
எட்டுத் திக்குமா?

கொத்துச் சரங்களாய்
எம்மின மக்களை
கொன்றவன் காடையன்- தொடர்
கொத்தணிக் குண்டினால்
செத்து மடிந்திட
வைத்தவன் சிங்களன்!

நாகராய் இயக்கராய்
வாழ்ந்தவர் தமிழரே
என்றுபறை சாற்றடா – நம்
உரிமைகள் யாவையும்
பறித்தவன் சிங்களன்
உலகறியக் காட்டடா!

அண்ட வந்தவன்
அடிமையாய் ஆக்கினான்
அறவழி தோற்றது – தலவனின்
மறப்படை எழுந்தது
மலர்ந்தது ஈழமே – பின்
சூழ்ச்சியால் வீழ்ந்தது!

முள்ளி வாய்க்கால்
தமிழர் பிணமாய்
ஆனதுதான் கேள்வி ? – மீண்டும்
தனித்தமிழ் ஈழமே
விடுதலை படைத்திட
வளர்ப்போம் வா!வேள்வி

கவிதை -தொகுப்பில்
நூல்நயம் போலினிக்கும்-கவிஞர்
பாவை அண்ணா – கவிஞர்
மதிமகன் அண்ணா இருவருமே
விடுதலைக் கென்றே
தொடர்க கவிவேள்வி!

அபிராமி கவிதாசன்.
28.05.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading