கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

செல்லாக்காசு

வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்
உதவாத நிலைக்குள் ஓரமிடும்
ஒற்றை வார்த்தை
செல்லாக்காசு
தரமே தாழ்ந்த நிலை உரைக்கும்
தகுதி இழந்து பலம் குன்றும்
தாக்கம் தந்திடும்
சொல்லிதுவே

தன்னைத் தானே புடமிட்டு
தரத்தில் மின்னை போல் பாய்ந்து
செல்லாக்காசும் ஒர்நாளில்
சிறப்பை எட்டிடும்
பெறுமதியில்
சீராய் நேராய் வாய்ப்புண்டு
விதியின் வசமும்
வாழ்வுண்டு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan