பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

அழகொளிரும் ஐப்பசி

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2041!!

ஐப்பசி அழகொளிரும்..!!

சக்கரமாய்ச் சுழலும் திங்கள்
சரித்திரமாய் பதியும் எங்கும்
ஐப்பசியும் அழகு சிந்தும்
அளவான மழையும் பொழியும்

இருள் வந்து விரைந்து கௌவும்
இளங்காற்று முதிர்ச்சி கொள்ளும்
பகல் நேரம் சுருங்கிச் செல்லும்
முன் பனியும் மூசியே பெய்யும்

எழுச்சிப் பெண்கள் நாளும் வரும்
ஏனைய சிறப்பு நாளும் வரும்
என் தந்தையின் நினைவு கொஞ்சும்
துயரினால் விழிகள் கெஞ்சும்

பழுத்து உதிரும் இலைகள் எழில்
பார்வை முழுதும் மஞ்சள் அதில்
பருவ கால மாற்றம் விழிகளில்
பாரினில் உணர்வீர் பலதும் இதில்..

Nada Mohan
Author: Nada Mohan