ஆசிரியர்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 33
தலைப்பு = ஆசிரியர்

கல்வி எனும் விளை
நிலத்தில் அறிவு எனும்
பயிரை விளைத்து

அன்பெனும் நீரைப் பெருக்கி
கல்விக்கு உயிருட்டுபவர்கள்

சரியான பழக்க வழக்கங்களை
எமது மனதில் பதியச் செய்பவர்கள்

தவறான விடயங்களில் தலை
நீட்டினால் தவறு என தட்டிக்கொடுப்பவர்கள்

கல்வி எனும் நடுக்காட்டில்
திசைகாட்டியாய் இருப்பவர்கள்

தமது நேரத்தை மாணவர்களுக்கு
படிப்பிப்பதற்கு என்று செலவிடுபவர்கள்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading