இதெல்லாம் இப்ப (எங்கை) எங்கே?

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-44
12-12-2024

இதெல்லாம் இப்ப (எங்கை) எங்கே?

இயற்கை காற்றும்
இணைந்த விவசாயமும்
நஞ்சு கலக்கா உணவும்
நெஞ்சு குலுங்க சிரிப்பும்

வஞ்சகமில்லா நட்பும்
வாஞ்சையோடு உறவுகளும்
தொஞ்சு போனதே
நெஞ்சம் பதறுதே இதெல்லாம் இப்ப எங்கை????

பாழாய்ப் போன யுத்தம்
தேளாய்க் கொட்டியது
வீழோம் என எண்ணி
வாழ்வோ அந்நியதேசம்

பஞ்சு மெத்தை தூக்கம்
நெஞ்சம் தீரா இழப்பு
வரண்டு போன மனிதம்
மிரண்டு கிடக்கும் உரிமை இதெல்லாம் இப்ப இங்கை..

மாறுதல் வேண்டுமிங்கே
மனித உரிமை மீறலற்று
நெஞ்சமதில் நேர்மை கொண்டு
நிம்மதியாய் வாழ்வோம் நாளை.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading