14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
இதெல்லாம் இப்ப (எங்கை) எங்கே?
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-44
12-12-2024
இதெல்லாம் இப்ப (எங்கை) எங்கே?
இயற்கை காற்றும்
இணைந்த விவசாயமும்
நஞ்சு கலக்கா உணவும்
நெஞ்சு குலுங்க சிரிப்பும்
வஞ்சகமில்லா நட்பும்
வாஞ்சையோடு உறவுகளும்
தொஞ்சு போனதே
நெஞ்சம் பதறுதே இதெல்லாம் இப்ப எங்கை????
பாழாய்ப் போன யுத்தம்
தேளாய்க் கொட்டியது
வீழோம் என எண்ணி
வாழ்வோ அந்நியதேசம்
பஞ்சு மெத்தை தூக்கம்
நெஞ்சம் தீரா இழப்பு
வரண்டு போன மனிதம்
மிரண்டு கிடக்கும் உரிமை இதெல்லாம் இப்ப இங்கை..
மாறுதல் வேண்டுமிங்கே
மனித உரிமை மீறலற்று
நெஞ்சமதில் நேர்மை கொண்டு
நிம்மதியாய் வாழ்வோம் நாளை.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...