பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

இராசையா கௌரிபாலா

எதிர்ப்பலைகள்
———————
அலைய லையாய் மக்கள்
அணிகள் திரண்டு எதிர்ப்பில்
விலைகள் எல்லாம் ஏற்றம்
விவாதமாய் அரங்கில் இன்று

ஆளும் அரசும் முறைகேட்டில்
அசமந்தப் போக்கில் நாடும்
மாளும் கனவுகள் அதிகம்
மக்கள் திண்டாட்டம் அச்சத்தில்

உணர்வுகள் வேடிக்கை யாகவே
உறக்கம் இன்றிய ஆர்ப்பாட்டம்
பணமும் இன்றிப் பரிதாபமாய்
பட்டினி நோக்கிச் செல்கிறதே

அன்னியச் செலாவணி இல்லை
அடக்கு முறைத் திணிப்பும்
மன்னராட்சி எதிர்ப்பலை நோக்கி
மகுடவாசம் மண்ணில் ஒலித்தே

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan