26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
இரா்விஜயகௌரி
உயிர் நேயம்
வெந்து தணிந்து வேரற அழிந்து
சொத்து சுகமெலாம் விட்டே களைந்து
ஆதி முதலாய் அனைத்தும் தொலைத்து
தேடிய வாழ்விது அகதியின் முத்திரை
காலங்கள்ஓடின காவியமாயினர்
உதிரமெழுதிய உறவும் மறந்ததோ
பின்னிப் பிணைந்த பேருறவின் பெருந்தழை
ஏழைகளாயின் ஏங்கித் தவிப்பதோ
மானுடநேயம் நித்தமும் விதைத்து
கருணையின் தொடுகையின் -நம்
கரங்களை பிணைத்து உயிர்களை
வாடும்உயிர்களை காப்பதெம்கடமை
யாசகம் என்றோர் வாசகம் வேண்டாம்
யாவரும் நமது உறவெனக் கொண்டால்
இதயம் இழைந்தெழும். இறைபணி போல
மலரும் வாழ்வில்மணிவிளக்கெனக் கலப்போம்
நாமே கடவுளர்நல்லவை தொடுப்பின்
அவரே கருவறை கனிந்து கலந்தால்
உயிர் நேயம் என்பது உள்ளத் தொடுகை
உயரிய அன்பில் பிழைபட வரைவோம்

Author: Nada Mohan
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...