பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

இரா.விஜயகௌரி தீதும் நன்றும்……….

இரா.விஜயகௌரி

தீதும் நன்றும் தினத்தின் விதைப்பே
பொருள் நிறை உழைப்பு புதுமையின் படையல்
அரண்டவன் மடிந்தால் அரவமும் தீண்டும்
விடியலை வரைவோன் விதியும் வரைவான்

நாளைய பொழுதினை நமக்கென வரைய
இன்றைய நொடியை கணித்திடல் சிறப்பே
வாழ்வின் கணக்கை வரைபவன் எவனோ
நாணிடிம் நிலைதனை மாற்றிட உழைப்பான்

சிந்தனைக்கதவுகள் சீர்படத்திறந்தால்
மெய்ப்படும் வாழ்வியல். பொய்ப்படாதிருக்கும்
ஏற்றமும் இறக்கமும இயல்பெனக்கொண்டால்
ஏற்றப்படிகளை செதுக்கிட முடியும்

சொல்லும் செயலும் பிறழாதிருப்போர்
செயற்படும் தொடுகையில் உயர்வின் தெறிப்பே
ஆற்றலும் அறிவும் நமதாயிருப்பின்
அழிவினைத் தடுத்து ஆக்கத்துள் விதைப்போம

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading