கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

இரா.விஜயகௌரி தீதும் நன்றும்……….

இரா.விஜயகௌரி

தீதும் நன்றும் தினத்தின் விதைப்பே
பொருள் நிறை உழைப்பு புதுமையின் படையல்
அரண்டவன் மடிந்தால் அரவமும் தீண்டும்
விடியலை வரைவோன் விதியும் வரைவான்

நாளைய பொழுதினை நமக்கென வரைய
இன்றைய நொடியை கணித்திடல் சிறப்பே
வாழ்வின் கணக்கை வரைபவன் எவனோ
நாணிடிம் நிலைதனை மாற்றிட உழைப்பான்

சிந்தனைக்கதவுகள் சீர்படத்திறந்தால்
மெய்ப்படும் வாழ்வியல். பொய்ப்படாதிருக்கும்
ஏற்றமும் இறக்கமும இயல்பெனக்கொண்டால்
ஏற்றப்படிகளை செதுக்கிட முடியும்

சொல்லும் செயலும் பிறழாதிருப்போர்
செயற்படும் தொடுகையில் உயர்வின் தெறிப்பே
ஆற்றலும் அறிவும் நமதாயிருப்பின்
அழிவினைத் தடுத்து ஆக்கத்துள் விதைப்போம

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading