தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

இரா விஜயகௌரி

உலகின் நிலைமாற என்ன கொண்டு
வருகிறாய்………

நித்தமுமாய் சுழலுகின்ற உலகு ஆங்கு
சிந்தனையின் சுழலுக்குள் மாந்தர்
பல்லினத்தின் உயிர் உறையும் உலகில்
பல்கி வரும் பேரதிர்வைக் காணீர்

புதியவளாய் பிறக்கின்ற பொழுதே -உனை
தாங்கி நடை பயில்கின்ற ஆண்டே
எத்தனையாய் புதிய விதி படைத்து-இங்கு
எங்களையே தாங்கி நடை பயில்வாய்

காலநிலை மாற்றங்கள் நிகழ கரை
புரண்டோடுகின்ற. நீரலைக்குள் ஆழ்ந்து
வாடி எழும் மனித குலம் முன்னே
நில நடுக்க அகழி வெட்டி உமிழ்ந்தாய்

விசித்திரத்தின் சித்திரமாய் திகழும் -எங்கள்
வாழ்குறியின் பொருளெதும் ஆண்டே
நாம் திருந்தி மெல்ல உனை காத்தால்
மனம் மகிழ வாழ்வமைப்பாய் என்பேன்

உழைப்போடு உயர்வுள்ளல் கொண்டு
மனிதத்தை பேணி எழும் மாந்தர்
நிலை மாறி இவர் எதிர்நீச்சல் கொள்ள
ஏற்றமிகு ஆண்டே நீ. வருவாய்

Nada Mohan
Author: Nada Mohan