நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 167
விழித்தெழு இனமே
தமிழென கூக்குரலிடும் எம்மினமே
அடுத்து வரும் சந்ததியை
அக்கறையுடன் கட்டி வளர்த்து
மிதக்க விடு கடலில்

கம்பன் பாரதி என்போமே
கற்பாரோ எம்பிள்ளைகள் இதை
தமிழ் கதைப்பாரோ எம் சேய்கள்
என்நிலையிலோ வரும் தலைமுறை

எம்மினத்தின் சாபமோ
நம் அறியாமை காரணமா
சிந்திப்பாயா தமிழா
விழித்தெழு எம்மினமே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan