இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 212
கல்லறை வீரரின் கனவிதுவோ

தியாகத்தின் சின்னம் நீங்கள்
வீரகாவியம் ஆனவர் நீங்கள்
மரணத்தை வென்றவர் நீங்கள்
மறப்போமா உங்களை நாங்கள்

உங்கள் கனவோ கல்லறையோடு
நனவாகாமல் அழிந்ததே கவலை
செய்த தியாகங்கள் வீணானதோ
எனினும் மறவோம் நாம் உங்களை

உங்களுடன் இணைந்த வீரர்களையே
மதிக்காத சிலர் எம் சமூகத்தில்
ஒரு பகுதியினரை உங்கள் கனவு
திருத்துமா என்பது என் கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading