இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 212
கல்லறை வீரரின் கனவிதுவோ

தியாகத்தின் சின்னம் நீங்கள்
வீரகாவியம் ஆனவர் நீங்கள்
மரணத்தை வென்றவர் நீங்கள்
மறப்போமா உங்களை நாங்கள்

உங்கள் கனவோ கல்லறையோடு
நனவாகாமல் அழிந்ததே கவலை
செய்த தியாகங்கள் வீணானதோ
எனினும் மறவோம் நாம் உங்களை

உங்களுடன் இணைந்த வீரர்களையே
மதிக்காத சிலர் எம் சமூகத்தில்
ஒரு பகுதியினரை உங்கள் கனவு
திருத்துமா என்பது என் கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading