இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 212
கல்லறை வீரரின் கனவிதுவோ

தியாகத்தின் சின்னம் நீங்கள்
வீரகாவியம் ஆனவர் நீங்கள்
மரணத்தை வென்றவர் நீங்கள்
மறப்போமா உங்களை நாங்கள்

உங்கள் கனவோ கல்லறையோடு
நனவாகாமல் அழிந்ததே கவலை
செய்த தியாகங்கள் வீணானதோ
எனினும் மறவோம் நாம் உங்களை

உங்களுடன் இணைந்த வீரர்களையே
மதிக்காத சிலர் எம் சமூகத்தில்
ஒரு பகுதியினரை உங்கள் கனவு
திருத்துமா என்பது என் கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading