“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

ஈரோடு நிவா

உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது
நோக்கிக்கொண்டு மட்டுமே உள்ளது
நமக்காக தான் ஆள்பவர்கள் என்ற எண்ணத்தை மறந்து உற்றுநோக்கி கொண்டிருக்கிறது
உலகில் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருப்பதையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது
தலைவலியும் காய்ச்சலும் அவரவர்க்கு வந்தால் தான் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப
உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது
பீரங்கிக் குண்டுகளுக்கு மத்தியில் செத்து விழுந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் குரலையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது
போர் வேண்டாம் என்று சொல்ல திறன் இல்லாமல் உற்றுநோக்கி கொண்டிருக்கிறது
இன்னும் நோக்கும்
பதிமூன்று வருடங்களுக்கு முன் என் ஈழத்தில் விழுந்த மரண ஓலங்களை உற்று நோக்கியது போல் இன்னும் உற்றுநோக்கும்

Nada Mohan
Author: Nada Mohan