மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ஈரோடு நிவா

உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது
நோக்கிக்கொண்டு மட்டுமே உள்ளது
நமக்காக தான் ஆள்பவர்கள் என்ற எண்ணத்தை மறந்து உற்றுநோக்கி கொண்டிருக்கிறது
உலகில் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருப்பதையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது
தலைவலியும் காய்ச்சலும் அவரவர்க்கு வந்தால் தான் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப
உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது
பீரங்கிக் குண்டுகளுக்கு மத்தியில் செத்து விழுந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் குரலையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது
போர் வேண்டாம் என்று சொல்ல திறன் இல்லாமல் உற்றுநோக்கி கொண்டிருக்கிறது
இன்னும் நோக்கும்
பதிமூன்று வருடங்களுக்கு முன் என் ஈழத்தில் விழுந்த மரண ஓலங்களை உற்று நோக்கியது போல் இன்னும் உற்றுநோக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading