அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

உறை பனி

ராணி சம்பந்தர்

வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த குளிரான
காற்றில் ஊதிப் பெருத்த பனித்துளி
வருத்தமுடன் கூறியது

எம் சிலருக்குப் பனி பிடித்திருக்கிறது
நையாண்டிப் பேச்சின் மனவலியிலே
பனித்துளி உறை பனியாய் ஊறியது
இதோ பார் பூப்போன்ற மென்மேனி
எங்கும் கொள்ளை அழகு மரங்களில்

பூப்போட்ட சேலை உடுத்த தேவதை
காட்சியிட எனை உருட்டி உருட்டிப்
பனி மனிதனாக்கி கரட் மூக்கும் ,
பொத்தான் கண்ணும் வைத்ததில்
நான் என்னையே மறந்த வலியே
துறந்து மன நிறைவில் உருகிய
உறை பனி ஆனேன் .

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading