பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

உழைப்பே உயர்வு

நகுலா சிவநாதன்
உழைப்பே உயர்வு

உழைப்பின் மேன்மை உயர்வு தருமே
பிழைப்புக்கு அதுவே பெருமை யாகும்
வாழ்க்கைக்கு வேண்டும் வளமான உழைப்பு
வண்ணமாய் வாழ எண்ணம்போல் அமையும்

முதலாளி தொழிலாளி வர்க்கம்
முனைப்போடு வாழ்விற்கு வெளிச்சம்
கடின உழைப்பே கடவுள் வரம்
துரிதமாகணும் தூரத்து விடியல்

மேதினம் வந்தது மேன்மைகள் பெற்றது
யாதினும் வர்க்கம் யாபேரும் ஒற்றுமை
வியர்வையின் துளியிலே விளைந்தது ஒருநாள்
விடுதலை கிடைத்தது மேதினம் ஒன்றில்

வியர்வை சிந்தி உழைத்த வர்க்கம்
விடுதலை ஒன்றைப் பெற்றிட்ட மகிழ்வு
போற்றிடும் நாளாய் மே ஒன்று
தொழிலாளர் உயர வழிசமைத்த திருநாள்

நகுலா சிவநாதன்1805

Nada Mohan
Author: Nada Mohan