கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

எல்லாளன்

ஐந்து தேர் ஊர்ந்துவரும் கந்தன் தலம் மாவை
ஆலயத்தில் அதைக்காண ஆண்டுதோறும் ஆசை
பந்தலிலே சர்க்கரை நீர் பருக சென்ற வேளை
பார்த்தே வியர்ந்தேன் ஓர்
பார்வையற்ற ஆளை
எந்தவித தடுமாற்றம் இன்றி நடமாட்டம்
ஏந்துகின்ற பேணிகளை
நிறப்புவதில் நாட்டம்
எந்தெந்த பொருள் எதிலே
என்ற மன கணிப்பு
எதிர் ஓசை நடை அளவை
கிரகிக்கும் சிறப்பு.

காது இரண்டும் இரு கண்ணை கொண்டுள்ள தாமோ
கைத்தலத்தில் கைத்தடியின்
தேவை இல்லை யாமோ
ஆதரவுக் ஆருமில்லா அப்பாவி அவனாம்
ஆனாலும் உழைத்து உண்ணும் ஆர்வமுள்ளோன் தானாம்
கூன் குருடு செவிடு என்று வரிசையிலே நின்று
கும்பிட்டு கை ஏந்தும் பலர் இருந்தார் அங்கு
பார்வையின்றி வாழ்வதற்கும்
ஊக்கம் ஒன்றே காணும்
பாடத்தை உணர்த்துதற்கு
அவன் ஒருவன் போதும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading