கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

எல்லாளன்

ஐந்து தேர் ஊர்ந்துவரும் கந்தன் தலம் மாவை
ஆலயத்தில் அதைக்காண ஆண்டுதோறும் ஆசை
பந்தலிலே சர்க்கரை நீர் பருக சென்ற வேளை
பார்த்தே வியர்ந்தேன் ஓர்
பார்வையற்ற ஆளை
எந்தவித தடுமாற்றம் இன்றி நடமாட்டம்
ஏந்துகின்ற பேணிகளை
நிறப்புவதில் நாட்டம்
எந்தெந்த பொருள் எதிலே
என்ற மன கணிப்பு
எதிர் ஓசை நடை அளவை
கிரகிக்கும் சிறப்பு.

காது இரண்டும் இரு கண்ணை கொண்டுள்ள தாமோ
கைத்தலத்தில் கைத்தடியின்
தேவை இல்லை யாமோ
ஆதரவுக் ஆருமில்லா அப்பாவி அவனாம்
ஆனாலும் உழைத்து உண்ணும் ஆர்வமுள்ளோன் தானாம்
கூன் குருடு செவிடு என்று வரிசையிலே நின்று
கும்பிட்டு கை ஏந்தும் பலர் இருந்தார் அங்கு
பார்வையின்றி வாழ்வதற்கும்
ஊக்கம் ஒன்றே காணும்
பாடத்தை உணர்த்துதற்கு
அவன் ஒருவன் போதும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading