மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

எல்லாளன்

ஐந்து தேர் ஊர்ந்துவரும் கந்தன் தலம் மாவை
ஆலயத்தில் அதைக்காண ஆண்டுதோறும் ஆசை
பந்தலிலே சர்க்கரை நீர் பருக சென்ற வேளை
பார்த்தே வியர்ந்தேன் ஓர்
பார்வையற்ற ஆளை
எந்தவித தடுமாற்றம் இன்றி நடமாட்டம்
ஏந்துகின்ற பேணிகளை
நிறப்புவதில் நாட்டம்
எந்தெந்த பொருள் எதிலே
என்ற மன கணிப்பு
எதிர் ஓசை நடை அளவை
கிரகிக்கும் சிறப்பு.

காது இரண்டும் இரு கண்ணை கொண்டுள்ள தாமோ
கைத்தலத்தில் கைத்தடியின்
தேவை இல்லை யாமோ
ஆதரவுக் ஆருமில்லா அப்பாவி அவனாம்
ஆனாலும் உழைத்து உண்ணும் ஆர்வமுள்ளோன் தானாம்
கூன் குருடு செவிடு என்று வரிசையிலே நின்று
கும்பிட்டு கை ஏந்தும் பலர் இருந்தார் அங்கு
பார்வையின்றி வாழ்வதற்கும்
ஊக்கம் ஒன்றே காணும்
பாடத்தை உணர்த்துதற்கு
அவன் ஒருவன் போதும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading