நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

எல்லாளன்

“தலையீடு”
சந்தம் சிந்தும் சந்திப்பு 230

பிரிய உறவொன்று
பிரிந்தது ஏன் என்று
புரியா நிலை கொண்டு
புதிரில் என் நெஞ்சு.

ஆரம்பம் முதலாக
அன்பு மிக ஆழம்.
பேரன்பு கொண்டு
பிரிய மனையாளும்.

மன குறைகள் இன்றி
மகிழ்வோடு வாழுதற்கு
பரஸ்பரம் உதவிகள்
பரிமாறல் வழக்கம்.

ஊரில் இருந்தாலும்
ஓயாமல் உரையாடல்
நீளும் தொடர்புவழி
நித்தம் .ஏன் நிசப்தம்?

காலம் சில செல்ல
காரணத்தை அறிந்தேன்.
கூறும் அறிவுரைகள்
கூடுவதும் உறவுக்குள்

வீணான தலையீடாய்
வெறுப்பேற்றும் .அளவாக
பேணாது போயின்
பிசகாகும்.உணர்ந்தேன்

தாய் பிள்ளை என்றாலும்
தலையீட்டை விரும்பாது.
தாம் தாம் தம் வழியில்,
தலை யீடு பெரும் பழியில்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan