பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

எல்லாளன்

“நித்தம் பேணுவம் சுத்தம்”

*. அன்றொரு நாள் அதிகாலை வரையும் வேலை
அயர்ந் உறங்கி திடுக்குற்று எழுந்த வேளை
என்றனது பல் பிடுங்க பதிந்த நேரம்
இன்னும் சில நிபிடத்தில் என்று நானும்
அந்தரமாய் தயாராகி பல் டாக்குத்தர்
அமைவிடத்தை சேர பெயர் அழைக்க கேட்டேன்
வந்தமரும் வாய் திறவும் என்று அன்பாய்
வலி தந்த கடைவாய் பல் பிடுங்கி விட்டார்

*வீட்டுக்கு திரும்பிய பின் குளிக்கப் போனேன்
வெறுப்படைந்தேன் என் தோற்றம் பார்த்து நானே
போட்டபடி பற்பசையும் பிறஸ்சின் மேலே
புறப்படுமுன் பல் துலக்க மறந்த தாலே
ஈட்டிமுனை போல் நரைகள் நாடி ஓரம்
இவற்றோடு வாய் நாற்றம் சகித்த வாறே
ஆட்டி மிக ஆறுதலாய் பல்லை பேர்த்த
அவர் பண்பை வியர்ந்தேன் கண் நீரை தேக்க.

* தலை முழுகி மயிர் வெட்ட போவோமானால்
சலூன்காரன் சீராக பணி செய் வானே
பலர் சூழும் பஸ் ரயிலில் பயண வேளை
பண்பாடு உடல் சுத்தம் பேணல் தேவை
அவைகளிலே உணவு பிற வரிசை சீரில்
அடுத்தவரை இடிக்காமல் நிற்போம்
நேரில்.
இசை நடன உரை அரங்கில் அழுது பிள்ளை
இடையூறு செய்யவிடல் பண்பே இல்லை..,..
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading