பண்படுமோ பண்பாடு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026

அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன் எம்மினத்தின் அவலமிதை
இன்பம் இனிவரும் காலம் எப்போ?

தொழில்நுட்ப உலகில் தொலைந்து நாம் – இன்று
தொழில் அற்றுத் திரிவது சரிதானோ?
தொலைபேசி இலவசம் என்பதனாலோ எம்- உறவுகளை
தொலைத்து விட்டோம் வெகு தூரம்

கலாச்சார உடை அணிந்து விட்டு
கலவரம் செய்வது நீதியல்ல
பிறர்வலி கண்டு உருகும் கண்ணீரில்
அறம் நிலைக்குமானால், பண்படுமே பண்பாடு.

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading