” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பண்படுமோ பண்பாடு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026

அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன் எம்மினத்தின் அவலமிதை
இன்பம் இனிவரும் காலம் எப்போ?

தொழில்நுட்ப உலகில் தொலைந்து நாம் – இன்று
தொழில் அற்றுத் திரிவது சரிதானோ?
தொலைபேசி இலவசம் என்பதனாலோ எம்- உறவுகளை
தொலைத்து விட்டோம் வெகு தூரம்

கலாச்சார உடை அணிந்து விட்டு
கலவரம் செய்வது நீதியல்ல
பிறர்வலி கண்டு உருகும் கண்ணீரில்
அறம் நிலைக்குமானால், பண்படுமே பண்பாடு.

Jeba Sri
Author: Jeba Sri