” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வாழ்த்து கவி

சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229

“வாழ்த்து கவி”
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும் நாள் கூட
நாளிகையாகிட!

பற்பல நிகழ்ச்சிகள்
பலதும் கண்டு மகிழ்ந்திட
தளம் தந்த பாமுகத்திற்கு வாழ்த்துக்கள் கோடி!

சந்தமும் சிந்தி
சங்கதியும் பல சொல்லி
கவிகளை தொகுத்து
படையலாக படைத்திடும்
பாவை அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!

மூன்நூற்றி
ஐம்பதாவது
வாரம்
முழுநிலவு போல் பிரகாசிக்கட்டும்
முத்தமிழும் சொட்டட்டும்!

கவிகளை அழகாக்கி
தனித்திருந்தும்
இணைத்தொகுப்பாளர் இணைந்து
திறனாய்வு செய்யும்
பாவை அண்ணாவுக்கும்
கவிதாரர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கோடி
வாழ்த்துகின்றோம் கூடி!

நன்றி
வணக்கம்
19.04.26

Author: