” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ…..23.04.2026

யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே பண்பாடு
வேதமெனக் கொள்வோம் பண்போடு
அடையாளம் தந்தது எமக்கு பண்பாடு
அடுத்தவர் துயரினைத் துடைப்பதுவும் எம்பண்பாடு
பண்படுவோம் எம்பண்பாட்டால் !

உழுதலில் நிலம்பண்படும்
அன்பினில் அறிவினில் மனம்பண்படும்
பண்பாட்டில் வையகமே பண்படும்
கல்வெட்டில் செதுக்கிய காவியமல்ல
உதிரத்தில் ஊறிய வாழ்வியல்அறமே பண்பாடு !

தொழில் நுட்பத்திற்குள் தொலைந்து
தொடர்பு எல்லைக்குள் இருந்துபிரிந்து
தொலைதூரம் வாழ்கிறோம்இன்று
காலங்கள் மாறலாம் கோலங்கள் சிதையலாம் – ஆனாலும்
பண்பாடெனும் வேரையும் விழுதையும் பேணி
பண்பாடு காத்து பண்போடு வாழ்ந்திடுவோம் !