நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ…..23.04.2026

யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே பண்பாடு
வேதமெனக் கொள்வோம் பண்போடு
அடையாளம் தந்தது எமக்கு பண்பாடு
அடுத்தவர் துயரினைத் துடைப்பதுவும் எம்பண்பாடு
பண்படுவோம் எம்பண்பாட்டால் !

உழுதலில் நிலம்பண்படும்
அன்பினில் அறிவினில் மனம்பண்படும்
பண்பாட்டில் வையகமே பண்படும்
கல்வெட்டில் செதுக்கிய காவியமல்ல
உதிரத்தில் ஊறிய வாழ்வியல்அறமே பண்பாடு !

தொழில் நுட்பத்திற்குள் தொலைந்து
தொடர்பு எல்லைக்குள் இருந்துபிரிந்து
தொலைதூரம் வாழ்கிறோம்இன்று
காலங்கள் மாறலாம் கோலங்கள் சிதையலாம் – ஆனாலும்
பண்பாடெனும் வேரையும் விழுதையும் பேணி
பண்பாடு காத்து பண்போடு வாழ்ந்திடுவோம் !